மச்சி1த்1தா1 மத்3க3த1ப்1ராணா போ3த4யன்த1: ப1ரஸ்ப1ரம் |
க1த2யன்த1ஶ்ச1 மாம் நித்1யம் து1ஷ்யன்தி1 ச1 ரமன்தி1 ச1 ||9||
மத்-சித்தாஹா----என்னில் நிலை நிறுத்தியவர்; மத்-கத-ப்ராணாஹா—--தங்கள் வாழ்க்கையை என்னிடம் ஒப்படைத்தவர்கள்; போதயந்தஹ---அறிவூட்டும் (கடவுளைப் பற்றிய தெய்வீக அறிவுடன்); பரஸ்பரம்—--ஒருவருக்கொருவர்; கதயந்தஹ---உரையாடுபவர்கள்; ச----மற்றும்; மாம்—---என்னைப் பற்றி; நித்யம்—--தொடர்ந்து; துஶ்யந்தி—--திருப்தியடைகிறார்கள்; ச--—மற்றும்; ரமந்தி—--(அவர்கள்) மகிழ்ச்சியடைகிறார்கள்; ச—-மேலும்
BG 10.9: தங்கள் மனதை என்னிடமே நிலைநிறுத்தி, தங்கள் வாழ்க்கையை என்னிடம் ஒப்படைத்த என் பக்தர்கள் எப்பொழுதும் என்னில் திருப்தி அடைகிறார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிவூட்டுவதிலும், என் மகிமைகளைப் பற்றி உரையாடுவதிலும் அவர்கள் மிகுந்த திருப்தியையும் ஆனந்தத்தையும் பெறுகிறார்கள்
தனக்கு மிகவும் விருப்பமானவற்றில் மூழ்கிவிடுவது மனதின் இயல்பாகும். இறைவனின் பக்தர்கள் அவரை நினைவு செய்வதில் ஆழ்ந்துவிடுகிறார்கள், ஏனென்றால் அவர்கள் அவரிடம் ஆழ்ந்த அபிமானத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அவரது பக்தி அவர்களின் வாழ்க்கையின் அடிப்படையாகிறது, அதிலிருந்து அவர்கள் வாழ்வதற்கான அர்த்தம், நோக்கம், மற்றும் வலிமையைப் பெறுகிறார்கள். ஒரு மீன் தண்ணீரால் சூழப்பட வேண்டும் என்று நினைப்பது போல் கடவுளை நினைவு கூர்வது இன்றியமையாததாக அவர்கள் உணர்கிறார்கள்.
மக்களின் இதயங்களுக்கு மிகவும் பிடித்தமானது எது என்பதை, அவர்கள் தங்கள் மனம், உடல் மற்றும் செல்வத்தை எங்கு அர்ப்பணிக்கிறார்கள் என்பதன் மூலம் தீர்மானிக்க முடியும். பைபிள் சொல்கிறது: ‘உன் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உன் இருதயமும் இருக்கும்.’ மாத்யூ 6:21). மக்களின் காசோலை புத்தகங்கள் மற்றும் கடன் அட்டை அறிக்கைகளில் இருந்து அவர்களின் இதயங்கள் எங்குள்ளது என்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்கள் ஆடம்பரமான கார்களுக்கு பணம் செலவழிக்கிறார்கள் என்றால், அவர்களின் இதயம் அங்கே இருக்கிறது. அவர்கள் ஆடம்பரமான விடுமுறைகளில் செலவிடுகிறார்கள் என்றால், அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க குழந்தைகளுக்கு அவர்கள் நன்கொடை அளித்தால், அதுவே அவர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக தங்கள் நேரத்தையும் செல்வத்தையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதிலேயே அவர்களின் அன்பு புலப்படுகிறது. அதுபோலவே, பக்தர்களின் அன்பு அவர்களின் ஒவ்வொரு சொல்லையும், எண்ணத்தையும், செயலையும் கடவுளுக்கு அர்ப்பணிப்பதில் வெளிப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்: மத்1-க3த1-ப்1ராணாஹா, 'என் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையை என்னிடம் ஒப்படைக்கிறார்கள்.'
அத்தகைய சரணாகதியிலிருந்து, மனநிறைவு வருகிறது. பக்தர்கள் தங்கள் செயல்களின் முடிவுகளைத் தங்கள் அன்புக்குரிய இறைவனுக்கு வழங்குவதால், எல்லாச் சூழ்நிலைகளும் அவரிடமிருந்தே வந்ததாக அவர்கள் பார்க்கிறார்கள். எனவே, அவர்கள் நேர்மறையான மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகளை கடவுளின் விருப்பமாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் இரண்டிலும் சமமாக இருக்கிறார்கள்.
கடவுள் மீதான பக்தர்களின் அன்பு மேற்கண்ட உணர்வுகளில் வெளிப்பட்டாலும், அது அவர்களின் உதடுகளிலும் வெளிப்படுகிறது. அவர்கள் கடவுளின் மகிமைகள் மற்றும் அவரது பெயர்கள், வடிவங்கள், நற்பண்புகள், பொழுது போக்குகள், தங்குமிடங்கள் மற்றும் பக்தர்களைப் பற்றி உரையாடுவதில் மிகுந்த மகிழ்ச்சியைக் காண்கிறார்கள். இவ்வாறே, கடவுளின் மகிமைகளைப் பற்றி கீர்த்தன் (கீர்த்தனைகள்) மற்றும் ஶ்ரவணம் (கேட்பது) ஆகியவற்றில் ஈடுபடுவதன் மூலம், அவர்கள் அவருடைய இனிமையைத் ருசித்து, மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறார்கள். கடவுளைப் பற்றிய தெய்வீக அறிவைப் மற்றவர்களுக்கு அறிவூட்டுவதன் மூலம் அவர்கள் ஒருவரின் முன்னேற்றத்தில் பங்கு பெறுகிறார்கள். கடவுளின் மகிமைகளைப் பற்றி பேசுவதும் பாடுவதும் பக்தர்களுக்கு மிகுந்த திருப்தியையும் மகிழ்ச்சியையும் தருகிறது. இந்த வழியில், அவர்கள் நினைவு கூறுதல், கேட்டல் மற்றும் பாடுவது போன்ற செயல்முறைகள் மூலம் அவரை வணங்குகிறார்கள். இது நினைவு கூறுதல், கேட்டல் மற்றும் பாடுதல், ஆகிய மூன்றும் கொண்ட பக்தி. இது முன்னர் 9.14 வசனத்தின் விளக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
அவரது பக்தர்கள் அவரை எப்படி வழிபடுகிறார்கள் என்பதை விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர், அவர்களின் பக்தி நடவடிக்கைகளுக்கு அவரது பதிலை இப்பொழுது விளக்குகிறார்.
மச்சி1த்1தா1 மத்3க3த1ப்1ராணா போ3த4யன்த1: ப1ரஸ்ப1ரம் |
க1த2யன்த1ஶ்ச1 மாம் நித்1யம் து1ஷ்யன்தி1 ச1 ரமன்தி1 ச1 ||9||
தங்கள் மனதை என்னிடமே நிலைநிறுத்தி, தங்கள் வாழ்க்கையை என்னிடம் ஒப்படைத்த என் பக்தர்கள் எப்பொழுதும் என்னில் திருப்தி அடைகிறார்கள். என்னைப் பற்றி ஒருவருக்கொருவர் அறிவூட்டுவதிலும், என் மகிமைகளைப் …
Sign in to save your favorite verses.
Sign In
మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి
పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్కు చేరుతుంది!